தேவன் கர்த்தரை
எழுப்பினாரே,
நம்மையும் தமது
வல்லமையினாலே எழுப்புவார் (
1
கொரிந்தியர்
6:14)
தேவனுடைய வல்லமை மட்டுமே
இதைச் செய்ய முடியும். கடினமான நேரங்களிலும் ஜெபத்தின் மூலம் பெலனடையக்கூடிய,
தேவனுக்கென்றே
அர்ப்பணிக்கப்பட்ட,
அன்பு
உயிர்ப்பிக்கப்படுவதற்காகக் காத்திருக்கும் ஒரு இருதயம் நமக்குத் தேவை. இன்பத்தை
அனுபவிக்கும்படி துன்பத்தின் வழியே கடந்துசெல்ல நாம் ஆயத்தமாயிருக்க வேண்டும்.
10.
ஒரு மாதிரி
ஜெபம்:
தேவனே,
இந்தப் போராட்டத்திற்கு
ஒரு முற்றுப்புள்ளி வைத்து,
எங்கள் வாழ்வை
உருக்குலைக்கும் சக்திகளைத் தகர்த்தெறியும்படி ஜெபிக்கிறேன். எங்களிலிருக்கும்
வேதனைகளையும்,
எங்களையே நாங்கள்
பாதுகாத்துக்கொள்ளும்படி உருவாக்கி வைத்திருக்கும் ஆயுதங்களையும் எங்களைவிட்டு
அகற்றிப்போடும். மன்னியாமை என்னும் பள்ளத்திலிருந்து எங்களைத் தூக்கிவிடும்.
உம்முடைய அன்பையும்,
சமாதானத்தையும்,
ஒப்புரவாக்குதலையும் எங்களுடைய செயல்களில் வெளிப்படுத்தும்படி எங்கள் மூலம்
பேசுவீராக! எங்களுக்குக் குறுக்கே எழும்பி நிற்கும் எல்லாத் தடைச் சுவர்களையும்
தகர்த்து,
அதன் வழியே
கடந்துசெல்ல எங்களுக்குப் போதியும். இப்போதுள்ள சூழ்நிலையை விட்டு எழும்பி,
நீர் எங்களுக்காக
வைத்திருக்கும் ஆரோக்கியம் மற்றும் முழுமைக்குள் செல்ல எங்களுக்கு உதவிசெய்யும்.
இயேசுவின் நாமத்தில் அவருடைய வல்லமையின்படியே ஜெபிககிறேன். ஆமென்!
11.
என்னைக்
குறித்த காரியமென்ன?
எனக்கும் ஜெபம் தேவை!
என் கணவர் எனக்காக
ஜெபிப்பாரா?
ஒருவேளை
இல்லாமலிருக்கலாம்.
உங்கள் கணவருக்காக
ஜெபிப்பதென்பது சுயநலமில்லாமல்,
நிபந்தனையில்லாத
அன்பு மற்றும் தியாகத்துடன் நீங்கள் செய்யும் ஒரு பெரிய செயலாகும். உங்கள் கணவர்
உங்களுக்காக இதே அர்ப்பணிப்புடன் ஜெபிப்பார் என்ற உறுதி இல்லாவிட்டாலும்,
நீங்கள் மிகுந்த
வாஞ்சையுடன் அவருக்காக ஜெபிக்கும் அர்ப்பணிப்பிற்குள் வரவேண்டும். சிலருடைய
கணவர்கள் தங்கள் மனைவிகளுக்காக ஒருபோதும் ஜெபிக்கிறவர்களாக இருப்பதே இல்லை. அவர்
உங்களுக்காக ஜெபிக்கிறாரா,
இல்லையா என்பது
உங்கள் கவலையாயிருக்கக் கூடாது;
அதைக் கர்த்தர்
பார்த்துக்கொள்வார்.
உங்கள் வாழ்வின்
சந்தோஷமும்,
நிறைவும் உங்கள்
கணவரின் ஜெபத்தையல்ல,
தேவனோடுள்ள உங்கள்
உறவைப் பொறுத்தே அமையும். ஆம்,
மனைவிகளுக்கும்
ஜெபம் தேவைதான் என்றாலும்;
தங்கள் கணவர்கள்
கண்டிப்பாகத் தங்களுக்காக ஜெபித்தே ஆகவேண்டும் எந்த மனைவியும் எதிர்பார்த்துக்
காத்துக்கிடப்பதோ,
அல்லது கணவரின் ஜெபத்தைச்
சார்ந்தோ வாழுவது சரியல்ல என்றே நான் நினைக்கிறேன்.
ஒரு பெண்ணின் திருமண
வாழ்வில் முக்கியமானது: அவள் தினமும் அல்லது வாரந்தோறும் தனது இருதயத்திலுள்ளதை
மனந்திறந்து பேசக்கூடிய,
ஆவிக்குரியவர்களும்,
மிகுந்த
நம்பிக்கைக்குரியவர்களுமான வேறு சில விசுவாசிகளான பெண்களுடன் சேர்ந்து
ஜெபிப்பதற்காக நேரத்தை ஒதுக்குவது அவசியம் என்று நான் நம்புகிறேன்.
உண்மையுள்ளவர்களும்,
நம்பிக்கைக்குரியவர்களுமான பெண்களின் ஐக்கியம் கிடைப்பது மிகவும் அரிதான
காரியம்தான் என்றாலும்;
தேவையுள்ள
ஆத்துமாக்களைத் தேவன் தனிமையில் தவிக்கவிடமாட்டார்.
இதுபோன்ற ஜெப
ஐக்கியங்களில் மற்ற பெண்களிடம் உங்கள் கணவரைக் குறித்த எல்லா விபரங்களையும்,
அவருடைய தனிப்பட்ட
வாழ்வின் இரகசியங்களையும் கூறவேண்டும் என்று ஒருபோதும் நினைத்து விடாதிருங்கள்.
உங்கள் இருதயத்தைத் தேவன் நேர்மையுள்ளதாக்கும்படியும்,
நல்ல மனைவியாக
இருப்பது எப்படியென்று தேவன் காண்பிக்கும்படியும்,
உங்கள்
ஆத்துமாவிலுள்ள பாரங்களைத் தேவனிடம் பகிர்ந்துகொள்வதும்,
உங்கள்
கணவரின்மேல் தேவனுடைய ஆசீர்வாதங்கள் வரும்படி கேட்பதுமே இதுபோன்ற ஐக்கியங்களில்
முதலிடம் பெறவேண்டும்.
உங்கள் கணவரின் ஜெப
ஆதரவும்,
ஜெபக்குழுவின்
ஐக்கியமும் இல்லாமலேயே நீங்கள் ஜெபிக்கும்போது காரியங்கள் நிகழத் துவங்குவதைக்
காண்பீர்கள். உங்கள் கணவருக்காகப் பல்வேறு விதங்களில் ஜெபிக்க வேண்டியதிருப்பதைக்
குறித்து நீங்கள் மனச்சோர்வடையக் கூடாது. ஒரே நாளில்,
ஒரே வாரத்தில்
அல்லது ஒரே மாதத்தில் நீங்கள் ஜெபித்து முடிக்க வேண்டுமென்று கட்டாயம் ஏதுமில்லை.
கடினமான பிரச்சனைகள் அல்லது உங்களுக்கு மலைப்பை உண்டுபண்ணும் காரியங்களைச்
சந்திக்கும்போது உபவாசத்துடன் கூடிய ஜெபம் அதிக பெலனுள்ளதாயிருக்கும். வேத
வசனங்களின் அடிப்படையில் ஜெபிப்பது இன்னும் வல்லமையாயிருக்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாகப்
பொறுமையை இழந்துவிடாதிருங்கள். குணமாகுதலைத் தேவன் கொண்டுவரும்படி காத்திருங்கள்.
நீங்கள்,
உங்கள் கணவர்
இருவருமே பூரணமானவர்கள் அல்ல என்பதை மனதில் கொள்ளுங்கள். தேவன் ஒருவரே பூரணமானவர்.
உங்கள் திருமண வாழ்வில் நடக்கவேண்டிய அனைத்திற்காகவும் தேவனையே நோக்கிப் பாருங்கள்.
அவை எப்படி நடக்கும் என்பதைக் குறித்துக் கவலைப்படாதிருங்கள்.
ö
ஜெபிப்பது உங்கள் பொறுப்பு
ö
பதிலளிப்பது தேவனுடைய பொறுப்பு
ö
காரியத்தைக் கர்த்தரின் கரங்களில் விட்டுவிடுங்கள்.
பாடம்
1ன்
முக்கியக் குறிப்புகள் பின்வருவனவாகும்:
குணசாலியான ஸ்திரீயைக்
கண்டுபிடிப்பவன் யார்?
அவளுடைய விலை
முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது. அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்;
அவன் சம்பத்துக்
குறையாது. அவள் உயிரோடிருக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையையல்ல,
நன்மையையே
செய்கிறாள். நீதிமொழிகள்
31:10,11,12.
ö
உங்களுடைய கணவரின் ஜீவியத்திலுள்ள சத்துருவின் அதிகாரத்தின்மேல் உங்களுக்கு வல்லமை
உண்டு,
ஏனென்றால்:
சத்துருவின் சகல வல்லமைகளையும் மேற்கொள்ள உங்களுக்கு நான் அதிகாரம் கொடுக்கிறேன்
என்று இயேசு கூறியுள்ளார் (லூக்கா
1):19).
ö
தீமையைத் தடுத்து நிறுத்தவும்,
நன்மையை
அனுமதிக்கவும் உங்களுக்கு அதிகாரம் உண்டு. உங்கள் குடும்ப வாழ்க்கையின்மேல் ஒரு
பாதுகாப்பு வளையத்தை உருவாக்க உங்களால் முடியும். ஏனென்றால்: பூலோகத்திலே நீங்கள்
எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும். பூலோகத்திலே
நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும்
கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று இயேசு வாக்குப்பண்ணியுள்ளார் (மத்தேயு
18:18).
ö
வேறு எவருடைய ஜெபத்தையும்விட,
உங்கள் கணவருக்காக
நீங்கள் ஜெபிக்கும் ஜெபமே அதிக வல்லமையுள்ளது;
ஏனென்றால் உங்கள்
இருவரையும் இணைக்கும் பரிசுத்த ஆவியானவர் உங்கள் ஜெபத்திற்கு அதிக பெலனைச்
சேர்க்கிறார். மத்தேயு
19:5ல்
...புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்;
அவர்கள் இருவரும்
ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று இயேசு கூறியுள்ளார்.
ö
திருமண வாழ்வில் இதுவரை நேரிட்ட எல்லா தீங்குகளையும்,
நஷ்டங்களையும்
தேவனால் சரிப்படுத்த முடியும். ஏனென்றால்: ...வெட்டுக்கிளிகள்... பட்சித்த
வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன் (யோவேல்
2:25)
என்று தேவன்
வாக்குப்பண்ணியுள்ளார்.
ö
இயேசுவை மரணத்திலிருந்து உயிரோடெழுப்பின அதே தேவ வல்லமை உங்கள் திருமண வாழ்வில்
செத்துப்போன நிலையிலுள்ள பகுதிகளை மீண்டும் உயிரோடு எழுப்பும். ஏனென்றால்: தேவன்
கர்த்தரை எழுப்பினாரே,
நம்மையும் தமது
வல்லமையினாலே எழுப்புவார் (1
கொரிந்தியர்
6:14) என்று
வேதாகமம் வாக்களிக்கிறது.
அடுத்த பாடம்
|